நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை மூடுமாறு கல்வியமைச்சு அறிவிப்பு

இரண்டாம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளும் நாளை ஒக்டோபர் 5ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக இரண்டாம் தவணை விடுமுறை வரும் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் என அறிவிக்கப்பட்டது.

எனினும் கம்பஹா – மினுவாங்கொடயில் 39 வயதுடைய பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றிரவு உறுதி செய்யப்பட்டது.

அதனால் நாடுமுழுவதும் பாடசாலைகளை மூட அரசு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் இரண்டாம் தவணை விடுமுறை நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் வகுப்புகளும் காலவரையறையின்றி மூடுமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.