மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பணியாளர்களில் மேலும் 5 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 78 பேருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இன்றுவரை கோவிட்- 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 483ஆக அதிகரித்துள்ளது.
திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவருடைய மகள் கோரோனா தொற்றுக்கு உள்ளாகியமை நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டதை அடுத்து அந்தப் பெண்ணின் தொழிற்சாலை பணியாளர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது.
அதனடிப்படையில் நாடுமுழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது.