பள்ளி மாணவனை நிர்வா ணமாக்கி சக மாணவர்கள் தாக்குதல்: உ.பியில் தொடரும் கொடூரங்கள்

உத்திரப் பிரதேசத்தில் காதல் விவகாரத்தால் 12ம் வகுப்பு மாணவரை நிர்வா ணமாக்கி தாக்கிய 10ம் வகுப்பு மாணவர்கள் மீது வழக்குப் பதிவு.

உ.பியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் அவரது பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இருவரும் தனியாக சந்திக்க ஒரு இடத்தை தேர்வு செய்தனர். அந்த இடத்திற்கு அவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் 12ம் வகுப்பு மாணவனையும் அவரது நபர்களையும் தாக் கி உள்ளனர். பின்னர் 12ம் வகுப்பு மாணவனை காரில் அமரசித்து காட்டு பகுதிக்கு அழைத்து சென்றனர். குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்கள் மாணவனின் வாயில் ஒரு துணியை அடைத்து, அவரது சில புகைப்படங்களை அவரது மொபைல் போனுக்கு மாற்றினர். பாதிக்கப்பட்டவர்களின் அனைத்து சமூக ஊடக கணக்குகளையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் செயலிழக்கச் செய்தனர்.

பின்னர் 12 ஆம் வகுப்பு மாணவனை நிர்வா ணமாக்கி அடித்து உதைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பிய போலீசில் புகார் கூறி உள்ளார்.மேலும் மாணவியுடன் உ றவு கொண்டதாக கூறும்படி கட்டாயப்படுத்தி வீடியோ எடுத்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் தாக்குதலை முன்கூட்டியே திட்டமிட்டதாக தெரிகிறது என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.