வவுனியா கோவில்குஞ்சுக்குளத்தை பூர்விகமாக கொண்டு லண்டனில் வசித்து வரும் சிறுவன் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் பிரித்தானியாவின் கேய்ஸ் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த சிறுவன் நேற்று இரவு 7 மணியளவில் தனது தாயுடன் நகர்ப்பகுதிக்கு சென்ற போது பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட போது வேகமாக வந்த கார் மோதியுள்ளது.
இதன் போது படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் வவுனியா பாலமோட்டை கோவில்குஞ்சுக்குளம் பகுதியை பூர்விகமாக கொண்ட 4வயது சிறுவனே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.