16 வயது சிறுமியுடன் 30 வயது நபருக்கு ஏற்பட்ட பழக்கம் விபரீதத்தில் முடிந்தது

சேலத்தில் 16 வயது சிறுமியை குத்திவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட 30 வயது இளைஞரால் பரபரப்பானது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதிஷ்(30),இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஓட்டுநராக உள்ளார்.

இவருக்கும் சின்ன சேலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் வழக்கம்போல் சிறுமியும் சதிஷும் பேசிக்கொண்டிருந்தபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சதிஷ் தான் வைத்திருந்த கத்தியால் சிறுமியைக் குத்திவிட்டு தப்பி சென்றார்.

மேலும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவர் சிகிச்சை பலன் அளித்து சிகிச்சையில் உள்ளார்.

இந்த நிலையில் சம்மந்தப்பட்ட இளைஞரை போலீசார் தேடி வந்தனர், இந்த நிலையில் சேலம் உடையப்பட்டி பைபாஸ் அருகே உள்ள பெருமாள் கோவில்மேடு பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் நள்ளிரவில் சதிஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் இறந்த சதிஷ் அவர்களின் பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்துள்ளது, அதில் சிறுமி தன்னை மிகவும் டார்ச்சர் செத்தால் மிகுந்த மனஉளைச்சலால் அவரைக் குத்திவிட்டு சென்றதாகவும், தன்னை போலீஸ் தேடுவதை அறிந்தே தற்கொலை முடிவை எடுத்ததாகவும் எழுதி வைத்திருந்தார்.

தனிடையே சதீஷ் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த சின்னசேலம் காவல் ஆய்வாளர் ராஜா உடனே சம்பவ இடம் வந்து விசாரணை செய்தார்.