முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் என கருதப்படும் ஒரு தொகை ஆயுதங்கள் – வெடிபொருட்கள் மீட்பு!

முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக கருதப்படும் ஒரு தொகை ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இன்றையதினம் மீட்கப்பட்ட்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா விசேட அதிரடிப்படையினரும் முல்லைதீவு விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்த ஆயுதங்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு தண்ணீர் தாங்கிகளில் வைத்து புதைக்கப்பட்டிருந்த இந்த ஆயுதங்களில் 3000 சிறியரக துப்பாக்கி ரவைகள் ,கைகுண்டுகள் 34, தமிழன் கைக்குண்டு 22,மிதிவெடிகள் 48,ஆர் பி ஜி எறிகணைகள் 7,ஜிபிஎம்ஜி ரவைகள் 2000,விமான எதிர்ப்பு ரவைகள் 1710 டெனக்கினேற்றோர்கள் 06, கிளைமோர் குண்டுகள் 04,விடுதலைப்புலிகளின் தயாரிப்பான அருள் எறிகணைகள் 34, 48 சி4 வெடிமருந்து என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் அவை அழிப்பதற்காக விசேட அதிரடிப்படையினரால் எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது