மிருசுவில் பகுதியில் இன்று காலை பட்டா ரக வாகனத்தை மோதித்தள்ளியது தொடருந்து. (படங்கள்)

மிருசுவில் பகுதியில் இன்று காலை பட்டா ரக வாகனத்தை மோதித்தள்ளியது தொடருந்து. இந்த விபத்தில் 18 வயது இளம்பெண் படுகாயமடைந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்துடன் தண்டவாளத்தைக் கடக்க முற்பட்ட வாகனம் மோதியது எனத் தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் படுகாயமடைந்தவர் சங்கத்தானைப் பகுதியைச் சேர்ந்தவர். அதேவேளை வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதிக்கு எந்தவிதப் பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

விபத்தில் படுகாயமடைந்தவர் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.