ஆசையாக ஊருக்கு வந்த புதுமாப்பிள்ளை: தூக்கில் தொங்கிய கொ டூரம்- கடிதம் சிக்கியது

தேனியில் கடிதம் எழுதிவைத்து விட்டு புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனுர் கே.கே குளம் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கோபிநாத், சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஜெயப்ரியா என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் வேலைக்காக மீண்டும் சவுதி அரேபியாவிற்கு சென்றுவிட்டார். அப்போது மனைவி ஜெயப்ரியா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 13ம் தேதி அன்று தனது சொந்தவூருக்கு வந்தார் கோபிநாத் அப்போது தனது மனைவியை சுருளிப்பட்டிக்கு சென்று அழைத்து வர போகியுள்ளார்.

அந்த சமயத்தில் மனைவியின் குடும்பத்தார் கோபிநாத் மனம் புண்படும் வகையில் பேசியுள்ளனர்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட கோபிநாத் வீட்டின் அறையை பூட்டிக்கொண்டிருந்துள்ளார், ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த அறையின் காது திறக்காததால் அவரது உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்,

அப்போது அங்கே கோபிநாத் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்,அ வரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்,மேலும் அந்த இடத்தில ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார் கோபிநாத் எழுதிவைத்ததாவது

நான் கோபி எழுதி கொள்கிறேன். எனக்கு வாழ விருப்பம் இல்லாததால் அதனால் எனது உயிரை மாய்துகொள்கிறேன், இல்லையேல் என்னை நினைத்து எனது குடும்பத்தாரும் வருத்தம் அடைவார்கள் அதனாலே இந்த முடிவு எடுக்கிறேன்,மேலும் எனது பெற்றோரை எனது தம்பி பார்த்து கொள்வான்.

இந்த தற்கொலை முடிவை நான் எடுத்ததற்கு காரணமான ஜெயப்பிரியா (மனைவி), பிரேம்குமார் (மாமனார்), கமலா (மாமியார்), நிஜந்தன் (மைத்துனர்), ஜெயப்பிரியாவின் உறவினர்கள் விமலா, வாசியம்மாள், நர்மதா ஆகியோருக்கு உண்மையான தண்டனை கிடைக்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்,

இந்த நிலையில் அந்த 7 நபர் மீதும் கோபிநாத்தின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார், அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார் ,

இதில் ஜெயப்பிரியா, விமலா (45), நிஜந்தன் (25), கமலா (43) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் விசாரணையில் கோபிநாத்திடம் சம்பள பணம் கேட்டு மனைவியும் அவரது குடும்பத்தாரும் தொல்லை கொடுத்துள்ளார்கள், இதனாலே அவர் தற்கொலை செய்துள்ளார்.

இதற்கு முன் அவர் சவுதியிலும் அவர் தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.