இலங்கையில் புகுத்தப்பட்ட சீன மொழி; புறக்கணிக்கப்பட்ட சிங்களம், தமிழ்;

தனிமைப்படுத்தும் சட்டத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வழியே நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களின் தகவல்களை அடையாளமிடும் அறிக்கையில் சிங்களம் மற்றும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த தகவல் கோரும் அறிக்கையில் ஆங்கில மொழிக்கு மேலதிகமாக சீன மொழி சேர்க்கப்பட்டிருக்கின்றது.

மேலும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், சுகாதார அமைச்சு ஆகியவற்றின் முத்திரைகளும் அந்த அறிக்கையில் காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.