மாணவி ஒருவருக்கு விடையளிக்க உதவியதாக பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் கைது

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் போது மாணவி ஒருவருக்கு விடை எழுத உதவி செய்து பரீட்சை மோசடிக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வட்டுவா பகுதியில் உள்ள பாடசாலை பரீட்சை மண்டபத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜிதவுக்கு தகவல் வழங்கிய பின்னரே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.