திருமணமான நாளே மணப்பெண்ணை கடத்திய தம்பி: பேரதிர்ச்சியில் உறைந்த மாப்பிள்ளை

இந்தியாவில் காதல் திருமணம் செய்த மணப்பெண்ணை அவரது தம்பி கடத்திச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

ராஜஸ்தானில் துங்கர்பூரை சேர்ந்தவர் ஹேமேந்திர பட்டிதர், கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி நிஷா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.

அன்றைய தினமே அகமதாபாத்தில் வாடகை வீட்டில் வசிக்கத் தொடங்கினர், இதனை கேள்விப்பட்ட நிஷாவின் சகோதரர் முகேஷ் மற்றும் அவரது நண்பர் ரூப்லால் படேல் ஆகியோர் அகமதாபாத்துக்கு சென்று அவரின் சகோதரியை மீட்டு வர முடிவு செய்தார் .

அதன்படி ஒரு காரை எடுத்துக்கொண்டு, ஆசை வார்த்தைகள் கூறி நிஷாவையும், அவரது கணவரையும் ஊருக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

அவர்களும் நம்பி ஏறிய நிலையில், போகும் வழியில் தனது சகோதரியின் கணவரையும் உடன் வந்த அவரின் உறவுக்கார சிறுவனையும் அடித்து உதைத்து காயப்படுத்தி காரிலிருந்து கீழே இறக்கிவிட்டனர் .

பின்னர் தன்னுடைய சகோதரியை மட்டும் கடத்திக்கொண்டு ஓடி விட்டார்கள் .இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவர் ஹேமேந்திர அருகிலுள்ள காவல் நிலையத்தில் தன்னுடைய மைத்துனர் மீது புகார் கூறினார் .
இதனையடுத்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர்.