பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருந்து வந்த தடையை நீக்கி பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அதேவேளை, பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவைப் பொறுத்தே இந்த தீர்ப்பு உறுதிசெய்யப்படும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) பிரித்தானிய நேரம் காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பயங்கரவாதிகளாக சித்தரித்து விடுதலை புலிகளை தடை செய்த பிரித்தானியா இன்று அத் தடையை நீக்கியுள்ளது.