வரணியில் சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்ற 36 மாணவர்கள் கௌரவிப்பு!

யாழ்ப்பாணம், வரணி மத்திய கல்லூரியில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்ற 36 மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.

இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபையின் வரணி இரண்டாம் வட்டாரத்தின் உறுப்பினர் சிதம்பரப்பிள்ளை பிரபாகரன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவித்திருந்தார்.

இந் நிகழ்வில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.