கொழும்பு மாவட்டத்தில் தீடீரென 5 பிரதேசங்களுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வர்த்தக நிலையங்களில் பாரிய சனநெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெல்லம்பிட்டிய, புளூமண்டல், மோதர, மட்டக்குளி மற்றும் கிரேண்ட்பாஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 8 மணியளவில் அமுல்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக கடைகளிலும், பல்பொருள் அங்காடிகளிலும் கூட்டங்கூட்டமாக நிற்பதை அவதானிக்க முடிவதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.