வவுனியாவில் பேரூந்து விபத்து – பலர் காயம்!

வவுனியா மாங்குளம் பகுதியில் தனியார் பேரூந்தொன்று விபத்துக்குள்ளானதில் 30வரையில் காயமடைந்துள்ளதாக பொலிஸார்தெரிவிக்கின்றனர்

மேலும் குறித்த விபத்து பற்றி அறியவருவதாவது

இன்று (06.04.2018)மாலை வவுனியாவிலிருந்து விசுவமடு நோக்கி பயணித்த தனியார் பேரூந்தொன்று மாலை 5.15மணியளவில் வவுனியா மாங்குளம் பகுதியில் பயணித்த போது வீதியின் குறுக்கே மாடு பாய்ந்ததையடுத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த பேரூந்து விபத்துக்குள்ளாகி குடைசாந்ததில் பேரூந்தில் பயணித்த 30 பேர்வரையில் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இவ்விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.