காரைதீவில் இடம்பெற்ற Covid 19 கட்டுப்படுத்தல் வழிகாட்டல் குழுவின் 6வது கூட்டம்

Covid 19 கட்டுப்படுத்தல் வழிகாட்டல் குழுவின் 6வது கூட்டம் காரைதீவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 22.10.2020 திகதி காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

இதன் போது தற்போது நாட்டில், குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் பேலியகொட மீன் சந்தையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து ஏற்பட்டுள்ள காரைதீவு , மாளிகைக்காடு மீன் வாடிகளின் நிலைமைகள் ஆராயப்பட்டன.

மேலும் இக்கூட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்தல் குழுவினால் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் திரு.கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்களும்,பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ். ஜீவராணி அவர்களும், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு கே.டி.எஸ்.ஜெயலத் அவர்களும்,

உதவி பிரதேச செயலாளர் திரு எஸ்.பார்த்திபன் அவர்களும்,பிரதேச சபை செயலாளர் மற்றும் ஏனைய கொரோனா கட்டுபடுதல் வழிகாட்டு குழு அங்கத்தவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

– kajan –