கொழும்பு மாவட்ட மாளிகவத்தை, கெசல்வத்தை, பாபர் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு மற்றும் டாம் வீதி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இன்று உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.