மக்களே அவதானம்! முகக்கவசங்க​ளுக்கு 4 மணிநேரமே உயிர்! வைத்தியர்களின் முக்கிய அறிவிப்பு!

ஒரு முகக் கவசத்தை ஆகக் கூடியது 4 மணித்தியாலத்துக்கு மாத்திரமே அணிந்திருக்க வேண்டும் என சுகாதார மேம்பாடு அலுவலகத்தின் சமூக சுகாதார விசேட வைத்தியர் உத்பலா அமரசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே அதன்பின்னர் புதிய முகக் கவசத்தைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் நீங்கள் தொழிலுக்குச் செல்பவராயின், அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக வெளியே செல்வீர்களாயின் நீங்கள் அணியும் முகக் கவசத்தை 4 மணித்தியாலமே பயன்படுத்த வேண்டும். பின்னர் புதிய முகக் கவசத்தையே அணிய வேண்டும்“ எனவும் தெரிவித்துள்ளார்.

பயன்படுத்திய முகக் கவசங்களை ஆங்காங்கே வீசுவதாலும் கொரோனா தொற்று பரவலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் முகக் கவசங்களை அணியும் போது,மூக்கு, வாய் என்பவற்றை நன்றாக மூடும் வகையில் அணிய வேண்டும் என்றும், வெளியே செல்லும் போது, மேலதிகமாக 2 முகக் கவசங்களை கொண்டுச் செல்ல வேண்டும் எனவும் சமூக சுகாதார விசேட வைத்தியர் உத்பலா அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.