இலங்கையில் கொரோனா நோயாளிகளை மிகவும் மோசமாக நடத்தும் வைத்தியசாலை! அம்பலமான ஆதாரங்கள்

கொஸ்கம வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளை மிகவும் மோசமான முறையில் நடத்துவதாக சிங்கள ஊடகம் ஒன்று பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளது.

மிகவும் தரமற்ற உணவு வகைகள் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நோயாளிகளுக்கு வழங்கப்படும் வைத்தியசாலை உபகரணங்களும் பழுதடைந்து காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளி ஒருவர் இதனை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

சமகாலத்தில் இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக பரவி வரும் நிலையில், வைத்தியசாலையின் செயற்பாடு தொடர்பில் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.