புளியங்குளத்தில் விபத்து; கிளிநொச்சி இளைஞன் பலி!

வவுனியா புளியங்குளம் ஏ9 வீதியில் முத்துமாரியம்மன் ஆலயத்து அண்மையில் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த றொஷான் (வயது 22) என்ற என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.

“புளியங்குளம் முத்துமாரி அம்மன் ஆலயத்துக்கு அண்மித்தாக பிரதான வீதியின் அருகில் உள்ள மின்சார கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளிலில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இந்த விபத்து இடத்பெற்றது என விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.