யாழில் பொலிஸ் காவலரன் எரிப்பு!

யாழ்.மணியந்தோட்டம் கடற்கரை வீதியில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் காவலரன் இனந்தெரியாத நரபர்களால் நேற்று இரவு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நடைபெற்றுவரும் சட்டவிரோ செயற்பாடுகள் மற்றும் சமூவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அப்பகுதியில் பொலிஸ் காவலரன் அமைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு அமைக்கப்பட்ட குறித்த காவலரனே நேற்று இரவு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.