9 960 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி!

வெளியான 2017 ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தரதர சாதாரண தரப் பரீட்சையில் முடிவுகளுக்கமைவாக ஒன்பது ஆயிரத்து 960 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்திபெற்றுள்ளார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை எண்ணாயிரத்து 24 ஆக காணப்பட்டது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கணித பாடத்தில் சித்தியடைந்தோரின் எண்ணிக்கை இம்முறை 4 சதவீதத்தால் அதிகரித்திதுள்ளது.

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 67 சதவீதமானோர் கணித பாடத்தில் சித்தியடைந்துள்ளார். உயர்தரத்தை கற்பதற்கு கூடுதலான மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது உயர்தரத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 73 சதவீதத்தை தாண்டுகிறது.