மட்டு. வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவிகள் சாதனை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்றில் முதன்முறையாக க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் 42 மாணவிகள் 09 ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நேற்று வெளியாகியுள்ள பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 21 மாணவிகள் எட்டு ஏ சித்திகளையும் ஐந்து மாணவிகள் ஏழு ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர்.

வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் இதுவரையில் 99.3 வீதமான மாணவிகள் சித்தியடைந்து உயர்தரம் கற்பதற்கான வாய்ப்பினைப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் அதிபர் சரணியா சுபாகரன் தெரிவித்தார்.