தூங்கிக்கொண்டிருந்த மனைவி… தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்த கணவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள பள்ளசூளகரை கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கராஜ் மற்றும் ருக்மணி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும், குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர்.

மதுவுக்கு அடிமையான தங்கராஜ், தினமும் குடித்துவிட்டு, மனைவியின் நடத்தை குறித்து தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்றும் தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், மிகவும் ஆத்திரமடைந்த அவர் தூங்கிக்கொண்டிருந்த தனது மனைவியின் தலையில், கல்லைப் போட்டு கொலை செய்தார்.

பின்னர், கல்லாவி காவல் நிலையத்திலும் சரண் அடைந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தங்கராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.