முகநூலில் கிடைத்த அழகான காதலி… ஆசையாய் அவதானிக்க வந்த காதலனுக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி

பேஸ்புக் மூலம் காதலித்த பெண்ணை நேரில் பார்க்க சென்ற நபருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருந்த சம்பவம் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவா(30). இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் இவருக்கு முகநூல் மூலமாக அனுஷ்யா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. ப்ரொபைல் புகைப்படத்தினை வைத்து மிக அழகாக இருந்ததால் இருவரும் தொலைபேசியில் பேசியும் வந்துள்ளனர்.

சிவாவிடம் குறித்த பெண் ஆசையாக பேசி அவ்வப்போது பணம் வாங்கியுள்ளார். இவ்வாறு சுமார் 3 லட்சம் வரை அப்பெண் பெற்றுள்ளார்.

பின்பு ஒருநாள் முகநூல் காதலியை சர்ரைஸாக சந்திக்க நேரில் சென்றுள்ளார். அப்போது இவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

ஆம் இத்தனை நாட்களாக தன்னிடம் பேசிக்கொண்டிருந்தது ஒரு இளம் பெண் என நினைத்த சிவாவுக்கு முதல் அதிர்ச்சி என்னவென்றால் அவரிடம் பேசியது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் அனுஷ்யா.

இரண்டாவது அதிர்ச்சி என்னவென்றால், முகநூலில் இருந்தது அந்த பெண்ணின் உண்மையான புகைப்படம் இல்லை. அந்த புகைப்படத்தில் இருந்தது அனுஷ்யாவின் பக்கத்துக்கு வீட்டு இளம் பெண்ணுடைய புகைப்படம் என்று தெரியவந்ததையடுத்து, பக்கத்துவீட்டு பெண்ணின் குடும்பத்தாரிடம் நடந்த சம்பவத்தினை கூறியதோடு, காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், மேலும் சில அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. போலி முகநூல் பக்கம் மூலம் காதலிப்பதாக நடித்து பணம் பறிக்க கூறி அனுஷ்யாவுக்கு ஐடியா கொடுத்தது அந்த பெண்ணின் தம்பி என்றும் இதற்கு குறித்த பெண்ணின் கணவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

இதனை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் பொலிசார் அவர்கள் மூவரையும் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.