கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஜனாதிபதியின் வாகனங்கள் : காரணம் இதுவா?

கடந்த யுத்த காலத்தின்போது ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக கொள்வனவு செய்யப்பட்டிருந்த குண்டு துளைக்காத அதிசொகுசு மகிழுந்துகள் மற்றும் ஜீப் ரக வாகனங்கள் என்பன இன்றைய தினம் ஆழமான கடலில் மூழ்கி அழிக்கப்பட்டன.
8 மகிழுந்துகள் மேற்கு பிரதேச ஆழமான கடல் பகுதியில் கொட்டி அழிக்கப்பட்டதாக கடற்படை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பல வருடங்கள் பழமையான குறித்த வாகனங்களை புதுப்பிக்க பாரிய செலவு ஏற்படும் என்ற காரணத்திகால் இவற்றை அழிக்க அரசாங்கம் தீர்மானித்தாக கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் கே.சீ.சீ உதயங்கள் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.