கொழும்பிலுள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவரே உயிரிழந்தவராவார். இந்தச் சம்பவம் நேற்றுப் பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 42 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் நுவரெலியா பிரதேசத்துக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் கொழும்பு நோக்கிப் பயணத்தை ஆரம்பித்து சென்ற வழியில் கொத்மலை ஆற்றில் நீராடிய போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவர் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த போது திடீரென சுழியில் சிக்குண்டுள்ளார். இதன் போது சக மாணவர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.
இதனையடுத்து கொத்மலை பொலிஸாரின் உதவியுடன் பிரதேச வாசிகளினால் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர் மீட்கப்பட்ட சடலம் கொத்மலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப் போவதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.