மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு தினம்!

இன்று(25) குருத்தோலை ஞாயிறு தினமாகும் .இன்றைய நாளில் உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் விசேட திருப்பலிகள் இடம்பெற்றன .

இந்நிகழ்வானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜெருசலேம் நகரில் நடந்த நிகழ்வாகும் .இன்றைய நாளை உலகில் உள்ள அணைத்தது கிறிஸ்தவர்களும் விசேட விதமாக நினைவு கூர்ந்து வருகின்றனர். .

கிறிஸ்தவர்களின் புனித நாட்களில் மிக முக்கிய நாளாக குருத்தோலை ஞாயிறு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது .,இந்நாளை நினைவு கூறும் முகமாக மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் விசேட திருப்பலி இடம்பெற்றது .

இத்திருப்பலியில் பங்கு,தந்தை சி வி .அன்னதாஸ் ,உதவி பங்குதந்தை லொயிட் , அருட்சகோதரர்கள் ,அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்களும் கலந்துகொண்டனர் .