ஒரே மாதத்தில் பொடுகு தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா?.. உளுத்தம்பருப்பு மட்டுமே போதும்!

பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி தலையை சொறிந்து கொண்டே இருப்பார்கள். இதனை பார்ப்பவர்களுக்கு முகம் சுளிக்கும் படியாக இருக்கும்.

பொடுகு பிரச்சனை மட்டும் இருந்தால், முக சருமம் பொழிவிழக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.

பொடுகு பிரச்சனையை தீர்க்க சுலபமான வழி என்ன என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்…

பொடுகு என்பது தலையில் மண்டை ஓட்டுப் பகுதியில் வெள்ளை வெள்ளையாக ஒட்டிக் கொண்டிருக்கும் திட்டுக்கள் தான் பொடுகு என்று கூறுகிறோம்.

பொடுகு இருப்பவர்கள் தலையை சொரிந்து விட்டு அந்த கைகளை முகத்திற்கு கொண்டு சென்றால் முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

இப்படி தலை முடியையும், முக அழகையும் கெடுக்கும் பொடுகு பிரச்சனையை வீட்டில் நாம் பயன்படுத்தும் உளுத்தம்பருப்பை வைத்தே ஒரே மாதத்தில் சரி செய்து விட முடியும். அதை எப்படி செய்வது? என்பதை இங்கு பார்ப்போம்.

நம் தலையில் இருக்கும் செல்கள் இறந்து உதிர்ந்து போவதைத் தான் பொடுகு என்கிறோம். இவை பொதுவாக அனைவருக்குமே நடக்கும் நிகழ்வு தான்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஒரு சிலருக்கு அவை அதிகமாக நடக்கும் பொழுது பிரச்சனையாக மாறுகிறது. தொடர்ந்து சொரிந்து கொண்டே இருந்தால் தலையில் எரிச்சலும், தோல் சிவந்து போகவும் செய்யும்.

எப்போதும் தலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள சருமம் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிப்பது நல்ல பலன் தரும்.

தீர்வாக வீட்டில் இருக்கும் உளுத்தம் பருப்பை சிறிதளவு எடுத்துக் கொண்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வேக வைத்த உளுத்தம் பருப்பை பசையாக செய்து கொள்ளுங்கள்.

இந்த பசையை தலை முழுவதும் வேர் கால்களில் படும்படியாக தடவி விட்டு பின்னர் ஒரு மணி நேரம் அப்படியே உலர விடவும்.

உளுத்தம் பருப்பு உலர்ந்ததும் தலையை அலசி விட்டால் போதும். தலையில் இருக்கும் பொடுகு, பேன் தொல்லைகள் முற்றிலுமாக நீங்கி விடும்.

மேலும், பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி செயற்கை பொருட்களை தலைக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இயற்கையாக கிடைக்கும் சீயக்காய் பயன்படுத்தி தலையை அலசினால் பொடுகு பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

அடிக்கடி ஷாம்பூ அதிகமாக உபயோகிப்பவர்களுக்கு பொடுகு பிரச்சனை அதிகமாகும் என்பதை நினைவில் வையுங்கள். எப்பொழுதும் ஷாம்புவை நேரடியாக தலைக்கு தேய்க்கக் கூடாது.

சிறிதளவு தண்ணீரில் கலந்து கொண்டு தான் பயன்படுத்த வேண்டும். ஏன் என்றால் அதில் இருக்கும் கெமிக்கல்கள் ஒரு சிலரின் கூந்தலுக்கு பாதிப்பை உண்டாக்கக் கூடியவை.