யாழில் தந்தை தனிமைப்படுத்தலில்; பாடசாலைக்கு சென்ற மகள்

யாழ்.அரியாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்திலிருந்து மாணவி ஒருவர் பாடசாலைக்கு சென்ற விடயம் சுகாதார பிரிவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து மாணவி வீட்டுக்கு திருப்பி அனுப்பபட்டதாக கூறப்படுகின்றது.

குறித்த மாணவியின் தந்தை ஒரு பஸ் ஓட்டுனர் எனவும், அவருடைய பேருந்தில் பயணம் செய்த ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் பஸ் ஓட்டுனர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது மகள் நேற்று பாடசாலைக்கு சென்ற நிலையில் சுகாதார பிரிவினரின் கனவத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டது.

இதை தொடர்ந்து குறித்த மாணவி வீட்டுக்கு அனுப்பபட்டு வீட்டிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளார்.