தாலியை கழட்டி வீசிய காதல் மனைவி… அடுத்த நொடியே புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு

தமிழகத்தில் திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் ஜீவா நகரைச் சேர்ந்தவர் விஷ்ணு(வயது 22), இவரும் திருப்பூரை சேர்ந்த ஷாலினியும்(வயது 20) காதலித்துள்ளனர்.

பின் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர், ஆரம்பத்தில் சந்தோஷமாக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் சண்டை மூண்டது.

இந்நிலையில் இருவருக்கும் திங்கட்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஆத்திரம் அடைந்த ஷாலினி , விஷ்ணுவை இழிவுபடுத்தும் விதமாக அவர் கட்டிய தாலியை கழற்றி வீசியதாக கூறப்படுகிறது.

மனைவியின் செயலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விஷ்ணு, ஆத்திரத்தில் வேகமாக தனது அறைக்கு சென்று உள்பக்கமாக கதவை பூட்டிக் கொண்டார்.

ஷாலினியால் கதவைத் திறக்க முடியாமல் உதவிக்கு உறவினர்களை அழைக்க, நீண்ட நேரம் போராடி அவர்கள் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு புதுமாப்பிள்ளை விஷ்ணு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர், இதற்கிடையே ஷாலினியும் கத்தியை எடுத்து தன்னைத் தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர், இந்நிலையில் வழக்குபதிவு செய்துள்ள கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.