இரண்டு நாட்களில்திருமணம்… சமையலறையில் கல்யாண பெண் அரங்கேற்றிய செயல்! சோகத்தில் குடும்பம்

தமிழகத்தில் தூத்துக்குடி அருகே இன்னும் சில நாளில் திருமணம் செய்ய இருந்த பெண் ஒருவர் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்தவர் சுடலையாண்டி. இவருக்கு சந்தன செல்வி (25), விஜயலட்சுமி (23) என்ற மகள்களும் இசக்கி தாஸ் (21) என்ற மகனும் உள்ளனர்.

இதில் இரண்டாவது மகளான விஜயலட்சுமிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்னும் சில தினங்களில் திருமணம் நடக்கவுள்ளது.

இந்நிலையில் நேற்று அதிகாலை சந்தன செல்வி, சமையலறைக்கு சென்ற போது அங்கு விஜயலட்சுமி புடவையில் தூக்கிட்டு இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியான சந்தனலெட்சுமி அலறியடித்து வெளியே வந்து அழ ஆரம்பித்துள்ளார். இதையடுத்து அங்கு கூடிய அக்கம்ப்பக்கத்தினர் விஜயலட்சுமியின் உடலை கீழே இறக்கி, பின்பு பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தற்கொலை குறித்து தகவலறிந்த போலிசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார். தனக்கு காது கேளாத பிரச்சனை இருந்ததால் திருமணம் வேண்டாம் என விஜயலட்சுமி சொல்லி வந்ததாகவும், ஆனால் பெற்றோரும் சகோதர சகோதரியும் அவரை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திருமணம் நெருங்கிய நிலையில் விஜயலட்சுமி இந்த முடிவை எடுத்தது அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.