மலசலகூட குழிக்குள் விழுந்த அரச பெண் ஊழியருக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

கழிவறைக்காக கட்டப்பட்டிருந்த குழியில் அரச ஊழியர் ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் இடம்பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் அரசு வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தின் கிடங்கு மேலாளராகப் பணிபுரிந்துவந்துள்ளார்.

மாற்றுத் திறனாளியான இவர் இன்று வழக்கம்போல் பணிக்குச் சென்ற நிலையில், கழிவறைக்கு அருகிலுள்ள வீட்டிற்குச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் முறையாக கட்டி முடிக்கப்படாத அந்த கழிவறையின் மூலையில் அமைக்கப்பட்ட பத்தடி ஆழம் கொண்ட செப்டிக் டேங்கில் இன்று 3 மணியளவில் தவறி விழுந்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் திரும்பாத காரணத்தால் அவரைத் தேடியபோது அவரது காலனி கருவறையின் முன்பு இருந்துள்ளது.

இதனையடுத்து அங்குள்ள செப்டிக் டேங்க்கில் தேடியபோது நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.

அவரை மீட்ட பொதுமக்கள் முதலுதவி அளித்து காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.