சித்திரை புதுவருடப் பிறப்பு தினத்தில் யாழ்ப்பாணத்தில் சுட்டெரிக்கப் போகும் சூரியன்!! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!!

வடக்­கில் அடுத்த மாதம் 13ஆம் 14ஆம் 15ஆம் திக­தி­க­ளில் சூரி­யன் உச்­சம் கொடுக்­க­வுள்­ளதாக வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளம் அறி­வித்­துள்­ளது. அன்­றைய நாள்­க­ளில் 36 பாகை செல்­சி­யஸ்­ வரை வெப்­பம் சுட்­டெ­ரிக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சூரி­யன் உச்­சம் கொடுப்­பது எதிர்­வ­ரும் 5ஆம் திகதி காலி மாவட்­டத்­தில் ஆரம்­பிக்­கி­றது. மறு­நாள் அளுத்­க­ம­வி­லும், 7ஆம் திகதி மொரட்­டு­வை­யி­லும் அதி­க­ள­வில் உச்­சம் கொடுக்­கி­றது. அது அவ்­வாறு நகர்ந்து எதிர்­வ­ரும் 13 ஆம்­தி­கதி மதி­யம் 12.10 மணி­ய­ள­வில் மன்­னா­ரில் சூரி­யன் உச்­சம் கொடுக்­கும். அன்று வழ­மை­யை­விட அங்கு அதி­க­ரித்த வெப்­ப­நிலை நில­வும்.

மறு­நாள் கிளி­நொச்சி, வட்­டக்­கச்சி ஆகிய இடங்­க­ளில் 12.10ற்க்கு உச்­சம் கொடுக்­கும். எதிர்­வ­ரும் 15 ஆம்­தி­கதி மதி­யம் 12:10ற்க்கு வட்­டுக்­கோட்டை மற்­றும் சுன்­னா­கம் ஊடாக கடல் பகு­திக்கு நகர்­கி­றது.

தற்­போது 31க்கும் 32க்கும் இடைப்­பட்ட அள­வில் வெப்­ப­நிலை நில­வு­வதாக வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­க­ளம் மேலும் தெரி­வித்­துள்­ளது.