திருகோணமலை 5 ஆம் கட்டைப் பகுதியில் ரிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இராணுவ வீரர்கள் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் திருகோணமலை 22 ஆவது இராணுவப் படைப்பிரிவில் கடமையாற்றும் இரு இராணுவ வீரர்களே படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.