திருமணமான மறுநாள் மணமகன் மரணம்: மணமகள் உள்பட 8 பேருக்கு கொரோனா

திருமணமான மறுநாள் மணமகன் இறந்த தகவலும் மேலும் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரோஸாபாத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிதத்துவது,

“சுமார் 10 நாள்களுக்கு முன்பு நாக்லா சவந்தி கிராமத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு கடந்த டிசம்பர் 4ம் தேதி மணமகன் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

ஆனால் அவரது உடல் அடக்கம் செய்தபோது அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தாமலே அடக்கம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் மணமகள் மற்றும் இறந்தவரின் தாய் உள்பட அனைவருக்கும் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் திருமணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா தொற்று இருக்கா என்பதற்கான பரிசோதனை நடத்த உள்ளதாகவும்” சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.