சித்ராவின் மார்பிலும் காயங்கள்… பரபரப்பை ஏற்படுத்தி கதறி அழுத தாய் மாமா : கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

தற்கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவின் மார்பிலும் காயங்கள் இருந்ததாக அவரது தாய் மாமா கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவரது முகத்தில் இருந்த காயங்கள் அவரது மரணம் தற்கொலைதானா என்ற சந்தேகத்தை எழுப்பியது.

இதனை தொடர்ந்து சித்ராவுடன் அறையில் தங்கியிருந்த அவரது கணவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்ராவுக்கு திருமணமாகி ஒன்றரை மாதங்கள் கூட ஆகாத நிலையில் அவர் இறந்ததால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவள்ளூர் ஆடிஓ திவ்ய ஸ்ரீ நாளை விசாரணையை தொடங்க உள்ளார்.

இந்நிலையில் சித்ராவின் தாய் மாமாவான சுரேஷ், அவரது மரணம் குறித்து பல்வேறு திடுக் தகவல்களை கூறியுள்ளார். அதாவது சித்ரா சேலையில் தூக்குப் போட்டிருந்தால் அவரது கழுத்தில் காயம் இருக்கணுமே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கழுத்தில் எந்த காயமும் இல்லாமல் கன்னம் மற்றும் தாடை, நெற்றி உள்ளிட்ட இடங்களிலும் அடிப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் சித்ராவின் மார்பிலேயும் அடிபட்டுள்ளதாக கூறி பகீர் கிளப்பியுள்ளார்.

மேலும் தங்களின் பொண்ணு தைரியமானவர் என்றும் சித்துவின் மரணத்தில் ஏதோ மர்மம் உள்ளது என்றும் சத்தியம் செய்துள்ளார். மேலும் சித்ராவின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் என்றும் அவரது தாய் மாமாவான சுரேஷ் கதறியுள்ளார்.