மீண்டும் இந்நிலை ஏற்பட்டால் அழிவு தான்..! சுவிஸ் அரசாங்கத்திற்கு பறந்த எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் மீண்டும் முழு ஊரடங்கு அமுல்படுத்தினால் பல நிறுவனங்கள் அழிந்துவிடும் என வணிகத் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஒரு மாத ஊரடங்கிற்கு பின் ஜெனீவாவில் கடந்த 10ம் தேதி பார்கள் மற்றும் உணவகங்கள் திறக்கப்பட்டன.

ஆனால், இரவு 7 மணியோடு கடைகளை மூட வேண்டும் என்ற சுவிஸ் அரசின் கட்டுப்பாடுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது

ஊரடங்கு குறித்து Romandie எண்டர்பிரைசஸ் தலைவர் Blaise Matthey கூறுகையில், மக்களிடையே பீதி இருக்கிறது. அராசங்கம் மற்றும் மக்களிடையே சிறந்த ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்.

ஜெனீவாவில் கடைகள் மூடப்பட்டாலும், அருகிலுள்ள vaud மாவட்டத்தில் கடைகள் திறந்திருப்பது எப்படி தர்க்கரீதியாக இருக்கும் என்று Blaise Matthey கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய மற்றும் உள்ளூர் அரசாங்கத்திடமிருந்து சிறந்த இழப்பீடு கிடைக்க வேண்டும் என்று Blaise Matthey கோரிக்கை விடுத்துள்ளார்.

தொழிற்சங்கத் தலைவர்கள் வணிக உரிமையாளர்களுடன் உடன்படுகிறார்கள் என ஜெனீவா தொழிற்சங்கத்தின் தலைவர் Davide de Filippo கூறினார்.

மேலும், குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு கூடுதல் உதவி தேவை, குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு 20% ஊதியக் குறைப்பு மிகவும் வேதனையானது மற்றும் உணவு உதவிக்கான தேவை அதிகரித்து வருகிறது என Davide de Filippo தெரிவித்தார்.