கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

தஞ்சை மாவட்டத்தில் வாகனத்தில் அமர்ந்து வந்த பெண் தவறி விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பெரிய தெரு பகுதி ஒன்று உள்ளது. அங்கு எப்போதும் பரபரப்பாக ஆட்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் அந்த பகுதியில் யாரும் எதிர் பார்க்காத விதத்தில் கண்ணைமைக்கும் நொடியில் ஒரு விபத்து நடந்தது.

பெரிய தெரு பகுதியில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒருவர் தனது வாகனத்தில் ஒரு பெண்மணியுடன் வந்துள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக வண்டியில் இருந்து அந்த பெண்மணி கீழே விழுந்துள்ளார்.

அப்போது அந்த அரசு பேருந்து அந்த பெண்ணின் தலையில் ஏற்றிச்சென்றது. இதனால் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சிறிய கவன குறைவால் ஒரு உயிரே பறிபோன சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.