கருவிலேயே இறந்த குழந்தை: மருத்துவர்களின் அலட்சியத்தால் பறிபோன இளம்பெண்ணின் உயிர்

சென்னையில் கருவிலேயே இறந்த குழந்தையை அகற்றுவதில் மருத்துவர்கள் தாமதம் செய்ததால் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை செங்குன்றத்தை சேர்ந்த தம்பதியினர் சரத்பாபு- கனிமொழி.

கனிமொழி கர்ப்பமான நிலையில் அருகில் இருக்கும் ருக்மணி பாய் என்ற மருத்துவரிடம் சிசிக்சை பெற்று வந்தார்.

9 மாதம் கர்ப்பிணியான கனிமொழியை பரிசோதித்த மருத்துவர், குழந்தை நன்றாக இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், கனிமொழிக்கு ஸ்கேன் செய்த போது குழந்தை இறந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கனிமொழியை தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர், குழந்தையை வெளியே எடுக்கும்படி கோரிக்கை வைத்தும் மருத்துவர்கள் தாமதித்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இறந்த குழந்தை காரணமாக தொற்று ஏற்பட்டு கனிமொழி இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் கனிமொழியின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சிகிச்சை கட்டணமாக 3 லட்சம் ரூபாயை கட்டச் சொல்லி மருத்துவமனை நிர்வாகம் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள மயிலாப்பூர் காவல் துறையினர் உடற்கூறு ஆய்வு செய்த பின்னர் கனிமொழியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.

மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தபடும் என்றும் காவல் துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.