முதியவர் ரயிலில் மோதுண்டு மரணம்!!

யாழ்ப்பாணம் – அரியாலை – முள்ளிப் பிரதேசத்தில் தொடருந்துடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ்.கொழும்புத்துறையைச் சேர்ந்த 73 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்.நோக்கிப் பயணித்த தொடருந்தில் மோதுண்டே இவர் உயிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.