காளியம்மனின் வரம் உண்மையானது – முன்னேஸ்வரம் ஆலயத்தின் பிரதான பூசகர்

காளியம்மனின் வரத்தால் சிகிச்சை செய்வது உண்மையானது எனவும் அந்த வரம் அனைவருக்கும் கிடைக்கும் ஒன்றல்ல எனவும் சிலாபம் முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் ஆலயத்தின் பிரதான பூசகர் காளிமுத்து சிவபாதசுந்தரம் தெரிவித்துள்ளார்.

சிங்கள வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

காளியம்மனின் வரம் அனைவருக்கும் கிடைக்காது. வரம் கிடைப்பது உண்மை. காளியம்மனின் அருள் வந்து ஆடுவதும் உண்மையானது.

காளியம்மன் மிகவும் பலமிக்க, பயங்கரமான தெய்வம். அந்த அம்மனை அவமதித்தால், அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். அது பயங்கரமான கெடுதியான பலனை கொண்டு வந்து சேர்க்கும். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு காளியம்மன் தண்டனை வழங்கியுள்ளார்.

இதன் காரணமாக அவர் அதிகாரம் இன்றி வெறுமனே இருந்து வருகிறார். இன்னும் தண்டனை வழங்க ஆரம்பிக்கவில்லை எனவும் காளிமுத்து சிவபாதசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.