திருக்­கோவில் வீதியில் கண்­டெ­டுத்த ஒரு இலட்சம் ரூபாவை பொலி­ஸாரை தேடிச் சென்று ஒப்­ப­டைத்த மாணவன்!

திருக்­கோவில் பிர­தே­சத்தில் வீதியில் கண்­டெ­டுத்த ஒரு இலட்சம் ரூபா பணத்தை பொலி­ஸாரை தேடிச் சென்று ஒரு மாணவன் ஒப்­ப­டைத்த சம்­பவம் 15.03.2018 அன்று திருக்­கோ­விலில் இடம்­பெற்­றுள்­ளது.

அம்­பாறை, திருக்­கோவில் பிர­தே­சத்தில் பாட­சாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது வீதியில் காணப்­பட்ட ஒரு இலட்சம் ரூபா கொண்ட பணப் பொதியை கண்டெடுத்து வீதிக் கட­மை­யி­லி­ருந்த பொலி­ஸாரை தேடிச் சென்று அந்த மாணவன் ஒப்­ப­டைத்­துள்ளான்.

திருக்­கோவில் கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட தம்­பி­லுவில் தேசிய பாட­சா­லையில் தரம் 8 பிரிவில் கல்வி கற்கும் க.ஹயானன் என்ற மாண­வனே தான் கண்­டெ­டுத்த பணம், வங்கிப் புத்­தகம் மற்றும் அடை­யாள அட்­டை­களை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்ளான்.

இத­னை­ய­டுத்து குறித்த பணமும், ஆவ­ணமும் உரி­மை­யா­ளர்­க­ளிடம் திருக்­கோவில் பொலிஸ் நிலை­யத்தில் வைத்து ஒப்­ப­டைக்­கப்­பட்­டன. குறித்த மாண­வனை பொலிஸார் பாராட்­டி­ய­தோடு இம்மாணவனை முன்மாதிரி யாகக் கொண்டு ஏனைய மாணவர்கள் செயற்படவேண்டும் எனவும் கூறினர்.