இளம் பெண் தூக்கில் தொங்கி மரணம்!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நேற்றுப் பிற்பகல் இளம் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதுகுடியிருப்பு 10ஆம் வட்டாரம் புதிய குடியிருப்பை சேர்ந்த 24 வயதுடைய கபிதரன் துர்க்கா என்னும் இளம் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் புதுக்குடியிருப்பு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.