ஆரிக்கு தான் டைட்டில்… சேமுவை ஏன் மச்சானு கூப்பிட்டேன் தெரியுமா? என் அக்கா அந்த மாதிரி இல்லை! ரம்யா தம்பி பரசு அதிரடி

ரம்யாவின் சகோதரர் பரசு பாண்டியன் மற்றும் அவரின் அம்மா இருவரும் அண்மையில் பிக்பாஸ் வீட்டுக்கு எண்ட்ரி கொடுத்தனர்.

இந்நிலையில் பரசு பாண்டியன் இந்த அனுபவம் குறித்து பிரபல ஊடகம் ஒன்றிடம் நேர்காணல் வழங்கியுள்ளார்.

அதில் பல சுவாரஷ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பாலாஜியை பார்த்து பிரதர் என அழைத்த அவர், சோமை பார்த்து ஹாய் மச்சான் என கூப்பிட்டார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன மச்சானா? என ஆச்சரியம் அடைந்தாலும் இதுவும் பார்க்க நல்லா தான் இருக்கு என கூறி வந்தனர். இதற்கு பரசு பாண்டியன் நான் வேற லெவல் ரியக்சனை எதிர்ப்பார்த்தேன். ஆனால் அவர் காட்டிய ரியக்சன் வேறலெவலில் இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அது மாத்திரம் இல்லை ஆரிக்கு டைட்டில் கிடைத்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், சிவானி பிக் பாஸில் விளையாட தகுதி அற்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அக்காவிடம் கூற நினைத்த விடயங்களை தெளிவாக கூறி விட்டேன். எந்த பிரச்சினையாக இருந்தாலும் தொடர்புடையவர்களிடம் பேசு என்று கூறினேன். இதை தான் அம்மாவும் கூறினார்.

அது மாத்திரம் இன்றி, எமது குடும்பமே ரொம்ப மகிழ்ச்சியான குடும்பம் நெகிழ்ச்சியான தருணத்தில் புண்ணகையுடன் இருப்போம் என்றும் வெளிப்படையாக பேசியுள்ளார்.