பலாத்காரத்தை அனுமதியுங்கள்: டிஜிபி சர்ச்சை பேச்சு!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற பெண்களை கெளரவிக்கும் விழாவில் அம்மாநில முன்னாள் பொலிஸ் டிஜிபி சங்கிலியானா கலந்து கொண்டார்.

விழாவில் டெல்லியில் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்ட நிர்பயாவின் தாய் ஆஷா தேவிக்கு விருது வழங்கப்பட்டது.

அப்போது முன்னாள் டிஜிபி சங்கிலியானா பேசினார்.

அவர் பேசியதாவது;

ஆஷா தேவியின் உடலைமைப்பே இவ்வளவு கட்டுக்கோப்பாக அழகாக இருக்கிறது.

அப்போது அவரது மகள் நிர்பயா எப்படி இருந்து இருப்பார்? அதேபோல் பெண்கள் பலம் உள்ள ஆண்கள் பலாத்காரம் செய்யும் போது சண்டையிடாமல் சரணடைய வேண்டும்.

ஆண்களிடம்ம் சரணடைவதால் உயிர் இழப்பை தவிர்க்கலாம். அதன் பின்னர், மீதியை நீதிமனறத்தில் பார்த்துக்கொள்ளலாம் என பேசியுள்ளார்.
சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியது தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.