ஒரு மாத காலம் மாத்திரமே அவகாசம்! அரசாங்கத்திற்கு பகிரங்க எச்சரிக்கை

மீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தம் ஏற்பட்டு ஒருவருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில், அதில் பாதிக்கப்பட்ட எவருக்கும் இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மீதொட்டமுல்ல குப்பை மேட்டுக்கு எதிரான தேசிய இயக்கம் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளது.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய குறித்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு ஒரு மாத காலம் மாத்திரமே அவகாசம் வழங்கப்படும் என அவர்கள் இதன்போது எச்சரித்துள்ளனர்.