பெண்கள் செய்த செயற்பாடு: விரட்டியடித்த இளைஞர்கள்!

வவுனியா – குடியிருப்புப்பகுதியிலுள்ள குளக்கட்டில் ஆண்களுடன், பெண்களும் இணைந்து மது அருந்தியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வவுனியா குடியிருப்பு குளக்கட்டுப்பகுதியிலிருந்து இளைஞர்களுடன் இணைந்து சில பெண்களும் மது அருந்தியுள்ளனர்.

இதன் போது, அவ்வீதியூடாகச் சென்ற இளைஞர்கள் சிலர் இதனை அவதானித்துள்ளதுடன், அவர்களிடம் ஏன் இவ்வாறு ஆலயப்பகுதியில் நடந்துகொள்கின்றீர்கள் என கேட்டுள்ளனர்.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையயே வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இளைஞர்கள் அவ்விடத்திலிருந்து மது அருந்திய இளைஞர்களையும், பெண்களையும் விரட்டியடித்துள்ளனர்.

ஆலய சூழலில் மது அருந்துவது சமூக சீர்கேடுகளை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், கலாச்சார விழுமியங்களும் பாதுகாக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.