குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் நாவாந்துறை குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா இன்று(14) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் சனிக்கிழமை குறித்த ஆலயத்தில் பெரும் திருவிழா நடைபெற்று வருடாந்த திருப்பலி மற்றும் திருசுருபப்பவனியுடன் திருவிழா நிறைவடையவுள்ளது.

இவ் வருடாந்தத் திருவிழாவில் இம்முறை ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.