பெறுபேறுகள் இந்த வாரம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளதாகவும் பெறுபேறுகள் இந்த வாரம் அளவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு சுமார் 6 இலட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.